26/11/2025
இப்பூமிப்பந்தின் ஆச்சரியம் மிக்க அசாத்தியமான தலைவன்
கல்லறை இல்லை கல்வெட்டுகள் இல்லை அடையாள தொன்மங்கள் இல்லை வரலாற்று காவியங்கள் இல்லை தொல்பொருள் இல்லை ஆவணங்களில்லை ஆனாலும் எரிக்கப்பட்ட சாம்பலாக கரித்துவல்களாக வேர் படர்ந்து விழுது விட்டு விருட்சமா நிக்கும் ஆணிவேர் அறுபடாத ஆலமரம்
இப்பூமிப்பந்தில் தமிழினம் மீது மேற்கொள்ளப்படவிருந்த, மேற்கொள்ளப்பட்ட அனைத்து வன்முறைகளையும் மூன்று தசாப்தங்களாக நெஞ்சில் சுமந்த காவிய நாயகன்
உன்னதங்கள் உதிப்பது உண்மையிலே ஓர் அதி உச்ச தீமையிலேயே தான்
அது போன்றதோர் நாள் இன்றும்
நித்தம் வஞ்சிக்கப்பட்ட இனத்தின், நிலத்தின் வாஞ்சனை மிகு காவலன்
ஆளும் அதிகாரத்தினால் தமிழ் இனம், நிலம், மக்கள் எப்போதெல்லாம் வஞ்சிக்கப்படுகிறார்களோ அப்போதெல்லாம் உச்சரிக்கப்படும் நாமம்
இப்பூமிப்பந்தில் தமிழர் மீது ஏற்படுத்தப்பட்ட அனைத்து வன்முறைகளையும் உலகப் பார்வைக்கு கொண்டு வந்த தீர்க்கதரிசன காவலன்
முகநூலில் தலைவன் நாமமில்லை புகைப்படமில்லை ஆனாலும் தமிழ் இனத்தின் ஒவ்வொரு உலகத்தமிழர் நெஞ்சத்திலும் உச்சரிக்கப்படும் இதயக்கோவில் நம் தலைவன்
தமிழ் தேசிய இனத்தின் தன்னிகரில்லாத் தானைப் பெருந் தலைவன் ஈழத்தமிழர்களின் பிதாமகன்
நலிவடைந்த சிங்கள தேசத்தினால் அண்மைக்காலமாக உச்சரிக்கப்பட்ட நாமம்
வீரத்தாயின் உதிரத்தில் விழுந்த விலைபேசமுடியாத முத்து
“ஓர் உயிர் உன்னதமானது என்பதனை நான் நன்கறிவேன் ஆனால், அந்த உயிரினும் உன்னதமானது எமது உரிமை; எமது விடுதலை; எமது கௌரவம்”
உலக தமிழரிற்கு முகம் முகவரி தந்தவர்
உலகத்தையே புரட்டிப்போட்ட புரட்சி வீரன் பல யுகம் சென்றாலும் படித்திட முடியாத மிகப் பெரும் காவிய சரித்திரம்
©®Kanthasamy Kirikaran
PC- Kanthasamy Kirikaran