கள்ளர் போர்ப்படை

கள்ளர் போர்ப்படை வனத்தில் மேய்ந்தாலும் இனத்தால் ஒன்று சேர்வோம் ..💯
(1)

08/04/2026

எஸ்ஐ இசக்கிராஜாவை முதலில் தாக்கியது எனது பையன்னு அவன் அப்பாவே ஒத்துக்கொண்டார் ...

கள்ளு இறக்குவது தமிழ்நாட்டில் சட்டப்படி குற்றம் ..

07/04/2026

துரோக கூடாரத்தை வேரறுக்க சின்னம்மா வின் தென்னந்தோப்பு சின்னத்திற்க்கு ஆதரவு தருவோம் ...🙏

#சின்னம்மா #சசிகலா

 #சசிகலா_அம்மையார் அவர்களின் ஆசி பெற்ற நட்சத்திர வேட்பாளர்கள்.1.உசிலம்பட்டி அயப்பன். ( தென்னந்தோப்பு சின்னம் ) 2.திருவாட...
06/04/2026

#சசிகலா_அம்மையார் அவர்களின் ஆசி பெற்ற நட்சத்திர வேட்பாளர்கள்.

1.உசிலம்பட்டி அயப்பன். ( தென்னந்தோப்பு சின்னம் )

2.திருவாடானை சுரேஷ் தேவர். ( சிங்கம் சின்னம் )

3.சாத்தூர் இசக்கி ராஜா தேவர்.
( தென்னந்தோப்பு சின்னம் )

4.முதுகுளத்தூர் ராம்குமார் பாண்டியன்.
( தென்னந்தோப்பு சின்னம் )

5.திருமங்கலம் ஜீவிதா நாச்சியார்.
( தென்னந்தோப்பு சின்னம் )

இவர்கள் அனைவரையும் வெற்றி பெற வைக்க வேண்டிய சூழ்நிலையில் முக்குலத்தோர் சமூகம் உள்ளது.

இவர்கள் வெற்றி பெற்றால் தான் முக்குலத்தோர் சமுதாயத்திற்கும் அரசியலில் ஒரு அங்கீகாரம் கிடைக்கும்.

சசிகலா அம்மையார் மீண்டும் அதிமுக கட்சியை கைப்பற்ற முடியும்.

அனைவருக்கும் தென்னந்தோப்பு சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள்.

#அயப்பன் #உசிலம்பட்டி #முக்குலத்தோர் #ஜீவிதாநாச்சியார் #ராம்குமார்பாண்டியன் #இசக்கிராஜா #சுரேஷ்தேவர்

1923ம் வருடம் ஏப்ரல் மாதம் 4ம் நாள் கட்ட முத்துத் தேவர் - சிவனம்மாள்  தம்பதியினருக்கு  ஆண் குழந்து ஒன்று பிறந்தது.  இதற்...
04/04/2026

1923ம் வருடம் ஏப்ரல் மாதம் 4ம் நாள் கட்ட முத்துத் தேவர் - சிவனம்மாள் தம்பதியினருக்கு ஆண் குழந்து ஒன்று பிறந்தது. இதற்கு முன்னால் பிறந்த குழந்தைகள் அனைவரும் இறந்து விட்டதால் இந்தக் குழந்தையும் இறந்து விடுமோ என்ற அச்சம் இந்த தம்பதியினருக்கு இருந்தது. இந்தக் குழந்தையைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அந்தப் பகுதியில் தொன்று தொட்டு நிலவி வந்த பழக்கத்தின் அடிப்படையில் ஊராரிடம் பிச்சையாகப் பணம் பெற்று மூக்குத்தி வாங்கி, விழா நடத்தி பிறந்த குழந்தைக்கு மூக்கு குத்தி மூக்கையா எனப் பெயரிட்டனர். இந்தக் குழந்தை மூக்கையா தான் பின்னாளில் தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத தலைவராக உருவெடுத்த அய்யா பி.கே. மூக்கையாத்தேவர் ஆவார்.

பாப்பாபட்டியில் ஆரம்பக் கல்வியும், உசிலம்பட்டியில் உயர்நிலைக் கல்வியும் பயின்றார். 1940 ஆம் ஆண்டு மதுரைக் கல்லூரியில் சேர்ந்தார். மாணவர் மன்ற செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். உடல் நலம் பாதிக்கப்பட்டதாலும், பொருளாதார நெருக்கடியாலும் கல்லூரிப் படிப்பை தொடர முடியவில்லை.

1949ம் ஆண்டு இராணி அம்மாள் என்ற மறவர்குல மங்கையை மணந்தார். இந்தத் திருமணம் பெற்றோருக்குப் பிடிக்கவில்லை. தனது மனைவி ஆசிரியையாகப் பணிபுரிந்த தெக்கூர் கிராமத்தில் வசிக்கலானார். தனது நண்பர் வி.கே.சி. நடராஜனை சந்தித்து தனது குடும்பச் சிக்கல்கள் குறித்து ஆலோசித்தார். தனது நண்பருடன் மதுரை வந்த பொழுது பார்வர்ட் பிளாக்கின் தலைவர்களான இரகுபதித் தேவரும், காமணத் தேவரும் மூக்கையாத்தேவரை பசும்பொன் தேவர் அவர்களிடம் அறிமுகம் செய்து வைத்தனர். அவரைப் பார்த்தவுடன் இவர்தான் பெரியகுளம் சட்டமன்றத் தொகுதிக்கு பொருத்தமான வேட்பாளர் என்று தேவர் முடிவு செய்துவிட்டார் . பார்வர்ட் பிளாக்கில் தொண்டராக இணைந்து அகில இந்திய தலைவராக உயர்ந்தார்.

1952 முதல் பொதுத் தேர்தலில் இருந்து 1979 இறக்கும் வரை தமிழக சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வியே அறியாமல் வெற்றி பெற்ற பெருமகனார் ஐயா மூக்கையாத் தேவர்.

காமராசர், அண்ணா, கலைஞர், எம்ஜிஆர், செயலலிதா உட்பட யாரும் படைக்க முடியாத வரலாற்றுச் சாதனையைச் செய்தவர் மூக்கையாத் தேவர்.

ஆம் நண்பர்களே!

ஒரே தொகுதியில் போட்டியிட்டு அனைத்து தேர்தல்களிலும் வென்ற பெருமை மூக்கையாத்தேவருக்கு மட்டுமே உண்டு. விதிவிலக்கு பசும்பொன் தேவர் திருமகனார் அவர்கள் மட்டுமே! பசும்பொன் தேவர் அவர்களும் 1952 , 57,62 தேர்தல்களில் முதுகுளத்தூர் தொகுதியில் நின்று வெற்றி பெறுகிறார். அவரது சீடரோ1952 முதல் 1979 வரை எவரும் அடைய முடியாத வெற்றிகளை ஈட்டுகிறார்.

1952 பெரியகுளம் சட்டமன்ற தொகுதி(அப்போது உசிலம்பட்டி தனித் தொகுதி கிடையாது).

1952- பெரியகுளம்

மூக்கையாத்தேவர் - 36,515
என்.ஆர். தியாகராஜன் - 31, 188

1957- உசிலம்பட்டி

மூக்கையாத் தேவர் - 31,631
பி.வி.ராஜ் - 11, 459

1962- உசிலம்பட்டி

மூக்கையாத்தேவர் - 47,069
தினகரசாமித்தேவர் - 22,992

1967- உசிலம்பட்டி

மூக்கையாத்தேவர் - 44,714
நல்லதம்பித்தேவர் - 16 ,225

1971 - உசிலம்பட்டி

மூக்கையாத்தேவர் - 42 , 292
ஆண்டித்தேவர் - 16, 909

1977- உசிலம்பட்டி

மூக்கையாத்தேவர் - 35,361
பொன்னையா - 1 1,422

இவை தவிர 1971ல் இராமநாதபுர நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுகிறார்.

1971 - இராமநாதபுரம் - எம்.பி. தேர்தல்

மூக்கையாத்தேவர் - 2, 08,431
பாலகிருஷ்ணன் - 1 , 39, 276

மூக்கையாத் தேவர் பெற்ற வாக்குகளையும் , வாக்கு வித்தியாசத்தையும் பாருங்கள். தமிழ்நாட்டில் மிக அதிக வாக்குகள் பெற்று தொடர்ச்சியாக வென்ற பெருமை மூக்கையாத்தேவருக்கு மட்டுமே உண்டு.

1967 ல் அண்ணா முதல்வராகப் பதவியேற்ற போது பதவிப் பிரமாணம் செய்து வைத்தவர் மூக்கையாத்தேவர் அவர்களே.

அதனால் தான் 1977 தமிழக சட்டமன்றத் தேர்தலில் உசிலம்பட்டி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளரை திரு.எம் ஜி ஆர் அவர்கள் வாபஸ் பெறச் செய்தார். இத்தனைக்கும் வேட்பு மனுத்தாக்கல் செய்த பிறகு வாபஸ் பெறச் செய்தார். அதற்கு எம் ஜி ஆர் கூறிய காரணம் முக்கியமானதாகும். " நீண்ட காலம் பொது வாழ்க்கையில் இருக்கும் பெருந்தலைவரான ஐயா மூக்கையாத்தேவர் அவர்கள் அண்ணாவிற்கே பதவி பிரமாணம் செய்து வைத்தவர். அப்பேர்பட்ட பெருந்தலைவரை எதிர்த்து என் கட்சி போட்டியிட விருப்பமில்லை" என்று வாபஸ் பெற வைத்தார்.

மூக்கையாத் தேவர் இறுதிக் காலம் வரை மதுரையில் வாடகை வீட்டில் தான் வசித்து வந்தார். சாகும் போது 600 00 கடன் சுமையோடுதான் இறந்தார். எளிமையின் மறு உருவம் அய்யா மூக்கையாத்தேவர். அவரை அடையாளப்படுத்த நாம் தவறிவிட்டோம். இறுதி வரை தேவர் பெருமகனாரின் தொண்டராகவே வாழ்ந்த அரசியல் அதிசயம் அய்யா மூக்கையாத்தேவர்.
அய்யாவின் கொள்கைகளை நெஞ்சில் ஏந்துவோம்.

தோழமையுடன்
மருது பாண்டியன்
சோசலிச மையம்
7550256060

22/01/2026

நான் திமுக ஆதரவாளன் அல்ல BJP காரர்கள் இதை M. K. Stalin கண்ணில் படும் வரை பகிரவும் .

#கள்ளர்_பள்ளி #கள்ளர்_விடுதி

அண்ணன் TTV Dhinakaran  திமுக கூட்டணியில் சேர்ந்திருந்தால் தீய சக்தியோடு சேர்ந்து அம்மாவுக்கு துரோகம் பண்ணிட்டார் என்று ச...
21/01/2026

அண்ணன் TTV Dhinakaran திமுக கூட்டணியில் சேர்ந்திருந்தால் தீய சக்தியோடு சேர்ந்து அம்மாவுக்கு துரோகம் பண்ணிட்டார் என்று சொல்லுவானுங்க.

தேர்தலில் கூட்டணி அமைக்காமல் தனியாக நின்றிருந்தால் சரியான கூட்டணி அமைக்க தவறி விட்டார் என்று சொல்லுவானுங்க.

விஜய் கூட கூட்டணிக்கு போய் குக்கர் சின்னம் கிடைக்காமல் புதிய சின்னம் கிடைத்து டெபாசிட் இழந்தால் புதுசா வந்தவரோட போயி சேரலாமா என்று சொல்லுவானுங்க.

இதெல்லாம் போக தேர்தலை புறக்கணித்தால் இவர் என்ன மைனாவுக்கு கட்சி ஆரம்பித்தார் என்று சொல்லுவானுங்க.

ஆக ஊருல நாலு பேரு நாலு விதமாக தான் பேசுவாங்க..
இன்றைய சூழ்நிலையில் அண்ணன் டிடிவி தினகரன் எடுத்த கூட்டணி முடிவு மிகச்சரியான முடிவாக தான் பார்க்கிறேன்.

என்ன இருந்தாலும் ஒரு துரோகத்தின் வருத்தம் இருக்கத்தான் செய்யும்.
அதற்கு அவரே பதிலும் கொடுத்து விட்டார்.

விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை, கெட்டுப் போகிறவர்கள் விட்டு கொடுப்பது இல்லை என்று...

பங்காளி சண்டைகள் என்றும் சமரசத்துக்கானதே...
அனைவரும் அம்மாவின் பிள்ளைகளே...

இதுவும் கடந்து போகும் நல்லதே நடக்கும்..... 🙏

 #தூக்கில்_இடப்பட்ட_500_கள்ளர்கள் #மதுரை மூவேந்தர்களின் வீழ்ச்சிக்கு பிறகு அவர்களின் படைபற்றுகளாக செயல்பட்ட கள்ளர் நாடுக...
02/01/2026

#தூக்கில்_இடப்பட்ட_500_கள்ளர்கள்
#மதுரை

மூவேந்தர்களின் வீழ்ச்சிக்கு பிறகு அவர்களின் படைபற்றுகளாக செயல்பட்ட கள்ளர் நாடுகள் யாருக்கும் கட்டுப்படாமல் தன்னரசு நாட்டை மதுரையை சுற்றி நிறுவுகின்றனர்.

ஒட்டுமொத்த கள்ளர் இனத்தில் தோராயமாக 30 முதல் 40 சதவீத மக்கள் பிறமலை நாட்டை சேர்ந்தவர்கள். தேனி மதுரை திண்டுக்கல் விருதுநகர் என பரவி வாழும் பெரும்பான்மை சமூகமாக தற்போது திகழ்கின்றனர்.

பாண்டியர்கள் வீழ்ச்சியை தொடர்ந்து மதுரையில் நடந்த அனைத்து அன்னிய படையெடுப்புகளையும் எதிர் கொள்ள வேண்டிய சூழ்நிலை பிறமலை நாட்டவர்களுக்கு இருந்தது.

நாயக்கர் ஆட்சி காலத்தில் மதுரையை இரண்டு முறை பிறமலை கள்ளர்கள் கைப்பற்றி கொண்டு சில ஆண்டுகள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தனர்.

அப்படிபட்ட வலிமை மிக்க பிறமலை கள்ளர்கள் ஆதிக்கத்தை எதிர்த்து போராடி கடைசிவரை வரி கட்டாமல் பல்வேறு துன்பங்களை ஆங்கிலேயர் காலத்தில் அனுபவித்தனர். வரிகட்டி இருந்தால் இவர்கள் நிலமையே வேறு.

கான்சாகிப் என்கிற மருத நாயகம் மதுரையில் அதிகாரத்தை கைப்பற்றி கொள்ளும் போது பிறமலை கள்ளர்களின் எதிர்ப்பினை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.

பாளையக்கார தலைவர்களுடன் இனைந்து பிறமலை நாட்டு கள்ளர்கள் மருத நாயகத்தை எதிர்க்கின்றனர். அத்தகைய போரினை பற்றி கான்சாகிப் கதைப்பாடல் கூறுகிறது.

“பாளையத்தை நடத்திச் சென்று சூழவே பிறமலை நாட்டாரை வளைத்து வில்லுக் கருச்சுனன் போல பார்த்த விடமெல்லாம் பிணக்காடாக வெட்டி யிழுத்தெறிந்து அடங்காத பிறமலை நாட்டாரை வளைத்து ஆறு பொதிமலை வெட்டி யடக்கினான் கானும்”

மதுரையில் உள்ள பாளையத்தை தனது கட்டுப்பாட்டின் கீழ் வழி நடத்தி சென்றிருக்கும் நேரத்தில், அவர்களுக்கு கட்டுப்படாத பிறமலை நாட்டாரை சுற்றி வளைத்து வில்லுக் அர்ச்சுனன் போல பார்த்த இடங்களில் எல்லாம் பிணக்காடாக கள்ளர்களை வெட்டி எறிந்தான்.

யாருக்கும் அடங்காமல் தன்னரசாக செயல்பட்ட பிறமலை நாட்டு கள்ளர்களை கொன்று அவர்களின் பிணங்களை மலை போல குவித்து வைத்தான் மருத நாயகம். இப்படி போரில் கொல்லப்பட்ட கள்ளர் மக்களை ஆறு பிணக் குவியல்கள் குவித்து வைக்கப்பட்டனர். (ஆறு பொதி மலை)

நினைத்து பார்க்கவே.. அவ்வளவு கொடுரமாக உள்ளது. அந்த 6 பிணக்குவியலில் எத்தனை பிறமலை கள்ளர்கள் உயிரிழந்து இருப்பார்கள் என்று சிந்தித்து பாருங்கள்.


இது மட்டும் இல்லாமல் பிறமலை நாட்டை சேர்ந்த 500 கள்ளர்களை பாளையக்காரருக்கு உதவி செய்தார்கள் என்று ஒரு குற்றச்சாட்டை வைத்து ஒரே நாளில் திருப்பரங்குன்றத்தில் தூக்கிலிடப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.

தூக்கில் இடப்பட்ட 500 கள்ளர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு என்ன?? மருத நாயகத்தின் ஆதிக்கத்தை எதிர்த்தார்கள் என்ற ஒரே குற்றச்சாட்டு தான் அந்த 500 கள்ளர்களையும் தூக்கில் இட வைத்தது.

“The poligar upon whom he fell could not resist the impetuosity of his attack and offered to capitulate and submit, but Yusuf Khan forced him to surrender at discretion, and then hanged him as well as five hundred of his Kallans who had fought for him. These he executed in a single day”

ஓரின சேர்க்கையாளர் சின்னத்துரைக்கும் நாடக காதல் சுர்ஜித்திற்கும் சமூக வலை தளங்களில் பக்கம் பக்கமாக ரைட்டப் எழுதிய போலி ச...
30/12/2025

ஓரின சேர்க்கையாளர் சின்னத்துரைக்கும்
நாடக காதல் சுர்ஜித்திற்கும் சமூக வலை தளங்களில் பக்கம் பக்கமாக ரைட்டப் எழுதிய போலி சாதி ஒழிப்பு போராளிகளும்,பிற சமூகத்தை சார்ந்த நபர் குற்றம் செய்தால் அந்த சமூக மக்கள் அனைவரும் குற்றவாளிகள் போல சாதியை குறிப்பிட்டு பதிவு போட்ட சாதி படம் எடுக்கும் இயக்குனர்கள் ரஞ்சித்,மாரி போன்றோர் இந்த மூன்று களவாணி பொறுக்கிகள் செய்த சம்பவம் பற்றி கண்டும் காணாமல் இருப்பது என்னவாக இருக்கும் ?

#முக்குலத்தோர்_செய்திகள்

26/12/2025

அறத்தமிழனின் செருப்படி பதிவு.... 🔥❤️

23/12/2025

வைகை அணை கட்டும் போது அங்க குடியிருந்த மக்களின் போராட்டம் உண்மை சம்பவத்தை வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் #கொம்பு_சீவி

18/12/2025

எதற்கும் மரணம் தீர்வு ஆகாது 🥲

Address

Usilampatti

Website

Alerts

Be the first to know and let us send you an email when கள்ளர் போர்ப்படை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category