திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம்

  • Home
  • India
  • Tiruvannamalai
  • திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம்

திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் திருவண்ணாமலை மாவட்டத்தின் தொன்மை, வர

திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் நடத்தும் 27 வது மரபு நடை தகடூர் யாத்திரைதமிழக வரலாற்றில் தனித்துவமான நிலவியலில...
16/06/2026

திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் நடத்தும் 27 வது மரபு நடை

தகடூர் யாத்திரை

தமிழக வரலாற்றில் தனித்துவமான நிலவியலில் இருந்து மூழ்கித்த வரலாற்றின் சுவடுகளைக் காணவும் அம்மண்ணில் தோன்றிய
வேளிர்கள், நாடாள்பவர்கள், மண்ணுக்காக இன்னுயிர் தந்தவர்களான வரலாற்று மாந்தர்களையும் இயற்கை அளித்த கொடையான மலைகளும், புனல்பொன்னி என்றும் காவேரியையும் அதன் அருவியையும் காண நல்லதொரு வாய்ப்பு.


இன்னும் ஒரு சில இருக்கைகளே உள்ளன. வர விழைபவர்கள் உடன் பதிவு செய்யலாம்..

நன்றி.
வருகைக்கு இன்றே பதிவு செய்க.
குகூள் படிவம் இணைப்பு
https://forms.gle/sERyLZZX5o6CsNtf9
தொடர்புக்கு
9080480924

04/06/2026
தென்கரை கோட்டை - தமிழ்நாட்டில் மிச்சமிருக்கும் தரை கோட்டைகளில் ஒன்று . தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தில் ...
04/06/2026

தென்கரை கோட்டை - தமிழ்நாட்டில் மிச்சமிருக்கும் தரை கோட்டைகளில் ஒன்று . தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தில் தென்கரைக்கோட்டை அமைந்துள்ளது.

ஜலகண்டேஸ்வரர் நதியின் தென்கரையில் கோட்டை அமைந்துள்ளதால் இதற்கு தென்கரை கோட்டை என பெயர் பெற்றதாக கூறப்படுகிறது. இது கிபி 16-ம் நூற்றாண்டில் கிருஷ்ண தேவராயரால் சுமார் 40 ஏக்கரில் கோட்டை கட்டபட்டதாக நம்பபடுகிறது. 1652-ம் ஆண்டு பிஜப்பூர் சுல்தான் வசமும் , 1968-ல் ஹைதர் அலியின் ஆட்சிக்கு உட்பட்டும் திப்பு, மன்ரோ காலத்தில் முக்கிய நகரமாகவும் திகழ்ந்தது.

கோட்டை மண்ணால் அமைக்கப்பட்ட பிரமாண்ட மதில் சுவரை அரணாகக் கொண்டது. கோட்டையை சுற்றி சுமார் 15 அடி ஆழ அகழி உள்ளது. கோட்டையின் உள்ளே மிகப்பெரிய குளம், ஓய்வறை, யானை, குதிரைகளின் லாயங்கள் உள்ளன. தற்போது இந்த லாயங்கள் இடிந்து விழும் நிலையில் உள்ளன. தர்பார் அரண்மனை, 50 அடி உயரம், 75 அடி நீளம், 30 அடி அகலம் கொண்ட தானிய சேமிப்புக் கிடங்கு உள்ளது.

குறுநில மன்னர் சீலப்ப நாயக்கர் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது ஜலகண் டேஸ்வரர் ஆற்றின் அருகே ஓய்வு எடுத்துள்ளார். அப்போது சீலப்ப நாயக்கரின் கனவில் திருமண கோலத்தில் ராமர் சீதையுடன் காட்சி அளித்ததால், அவர் தென்கரைக்கோட்டை பகுதியில் கல்யாண ராமர் நிறுவியதாக ஸ்தல வரலாறு கூறுகிறது.

கோட்டை வளாகத்தில் கல்யாண ராமர் கோயிலும் அதன் வடப்புறத்தில் நஞ்சுண்டேஸ்வரர் ஆலயம், அம்மன் சன்னதி, ஆஞ்சநேயர், முருகர் சன்னதிகள் உள்ளன. கல்யாண ராமர் கோவில் முன் மண்டப சிற்பங்கள், சடைப்பெண்கள் வேலைப்பாடு மிக்கவை.

திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் நடத்தும் தகடூர் யாத்திரையில் இவ்விடத்தை காண - https://forms.gle/PB1cVkQM3ew3Dg8r7

திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் நடத்தும் 27 ஆவது மரபு நடை தகடூர் யாத்திரைநாள்- ஜுன் 27,28 2026,  சனி, ஞாயிறுதம...
23/05/2026

திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் நடத்தும் 27 ஆவது மரபு நடை

தகடூர் யாத்திரை

நாள்- ஜுன் 27,28 2026, சனி, ஞாயிறு

தமிழ்நாட்டின் தனித்துவமான வரலாற்றுப் பின்னணியும் நிலவியலும் தொல் தடங்களும் கொண்ட சங்க கால தகடூர் (தருமபுரி) பகுதியில் இரண்டு நாள் மரபு கொண்டாட்டமாக ஒரு மரபு நடை

மேலதிக தகவல்கள் விரைவில்...

தொடர்புக்கு
9080480924

கல்வராயன் மலைதமிழகத்தில் ஒரு பகுதி இந்தியா சுதந்திரம் பெற்ற பின்பும் முப்பது ஆண்டுகள் கழித்து சுதந்திரம் பெற்ற இடம் ஒன்ற...
05/02/2026

கல்வராயன் மலை

தமிழகத்தில் ஒரு பகுதி இந்தியா சுதந்திரம் பெற்ற பின்பும் முப்பது ஆண்டுகள் கழித்து சுதந்திரம் பெற்ற இடம் ஒன்று உண்டு. அது கல்வராயன் மலை தான். நிலவியல் அடிப்படையில் கொங்கு நாட்டையும், நடு நாட்டையும் பிரிக்கும் முக்கிய கண்ணி. இதன் பொருட்டோ என்னவோ இங்கு மகேந்திரர் காலத்திய நடுகல்லும், சோழர் கால செக்கும், கோவிலும் உள்ளன.

கிருஷ்ண தேவராயரின் படைத்தளபதியாக இருந்த கல்வராயனின் வீரத்தை போற்றி கிருஷ்ண தேவராயர் அவருக்கு இந்த நிலப்பகுதியை தானமாக வழங்கியதாகவும், அதன் பொருட்டே இம்மலைக்கு கல்வராயன் மலை என பெயர் வந்ததாகவும் ஒரு கூற்று உண்டு.

விஜயநகர ஆட்சிக்காலத்தில் இம்மலை பாளையங்களாக பிரிக்கப்பட்டு இருந்ததாக தகவல் உண்டு. அதன்பின் ஆற்காடு நவாப் ஆட்சிக் காலத்தில் அரியக்கவுண்டன் ஜாகீர் என்பவருக்கு நவாப்பால் இம்மலை முழுவதும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. இவர் ஆர்க்காடு நவாபிடம் ராணுவத்தில் வேலை செய்தவர். இவரின் சிறப்பான சேவைக்காக அரியக்கவுண்டனுக்குக் கல்வராயன்மலை ஜாகீர் உரிமை நவாப்பால் வழங்கப்பட்டது. அதன்பின் படிப்படியாக மேலும் 4 ஜாகீர்கள் உறவின்முறை காரணமாகவும், ஊழியத்தின் காரணமாகவும் ஏற்படுத்தப்பட்டன.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஆங்கிலேயருக்குச் சாதகமாக நடக்க ஒப்புக் கொண்டதால் ஐந்து ஜாகீர்களுக்கும் இம்மலைப்பகுதி அவர்களின் தனிப்பட்ட சொத்துக்களாக ஆங்கிலேயர்களால் பட்டயங்கள் வழங்கப்பட்டன. இம்மலைவாழ் மக்கள் ஜாகீர்தார்களுக்குக் கொத்தடிமைகளாக இருந்து வந்தனர்.

1947இல் இந்தியா விடுதலை பெற்றாலும் இந்த மலைவாழ் மக்களுக்கு அந்த நாள் விடுதலை நாளாக அமையவில்லை. சுதந்திர நாட்டிலும் இம்மக்கள் தொடர்ந்து ஜாகீர்தாரின் கொத்தடிமைகளாகவே இருந்து வந்தனர்.

1963 ஆம் ஆண்டு அரசு ஜாகீர்தார் ஆட்சியை இம்மலைப்பகுதியில் ஒழிக்க முயற்சி செய்தது. ஆனால் இவர்கள் அரசுக்கு இணங்காமல் நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றனர். நீதி மன்றத்தில் தடை உத்தரவு பெற்ற ஜாகீர்தார்களுக்கு எதிராக அப்போதைய தென்னார்க்காடு மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. பத்மநாபன் அவர்களின் முயற்சியால் ஜாகீர்தார்கள் 14.08.1976 ஆம் ஆண்டு நீதி மன்றத்திலிருந்து எவ்வித நிபத்தனையுமின்றி வழக்கினைத் திரும்பப் பெற்றுக் கொண்டு அரசிடம் இம்மலைப் பகுதிகளைக் கொடுத்து விடுவதாக ஒப்புக் கொண்டார்கள்.

இதன்படி 25.8.1976ல் ஜாகீர்தாரர்களின் மலைப்பகுதிகளின் நிர்வாகத்தை இந்திய அரசு ஏற்றுக் கொண்டது. உண்மையில் இதுவே இவர்களின் சுதந்திர நாள். அதன் பின்பே அரசும் அரசு நிர்வாக அலுவலகங்களும் மேலே சென்றன. பின் வெள்ளிமலையைத் தலைமையாக ஒன்றியமும் ஒன்றிய அலுவகமும் 1985ல் அமைக்கப்பட்டது.

திருவண்ணாமலை வரலாற்று ஆய்வு நடுவம் நடத்தும் கல்வராயன் மலை மரபு நடையில் பங்கு பெற

https://forms.gle/EwZvwwgDjydbL6769

திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் 26 ஆவது மரபு நடை தேதி மாற்றம்வரும் பிப்ரவரி 2026, 21,22 சனி, ஞாயிறு ஆகிய த...
02/02/2026

திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் 26 ஆவது மரபு நடை தேதி மாற்றம்

வரும் பிப்ரவரி 2026, 21,22 சனி, ஞாயிறு ஆகிய தேதிகளில் நடத்த இருந்த நிலையில் அதிகமான திருமணம் நடக்கும் நாளாக இருப்பதால் பலரால் மரபு நடைக்கு கலந்து கொள்ள இயலவில்லை எனக் கோரியதால், மரபு நடையை ஒரு வாரம் தள்ளி நடத்த முடிவுசெய்துள்ளோம்.

நாள்: பிப் 28,மார்ச் 01, சனி, ஞாயிறு

கட்டணம் ரூ 4999/-
(Travel, Food, Luxury stay, Camp fire etc..)

தொடர்புக்கு: 9080480924, 7708673782
வருகையை உறுதி செய்ய ...

https://forms.gle/EwZvwwgDjydbL6769
சபா



Address

Tiruvannamalai
606601

Alerts

Be the first to know and let us send you an email when திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Museum

Send a message to திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம்:

Shortcuts

Share

Category