திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம்

  • Home
  • India
  • Tiruvannamalai
  • திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம்

திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் திருவண்ணாமலை மாவட்டத்தின் தொன்மை, வர

கல்வராயன் மலைதமிழகத்தில் ஒரு பகுதி இந்தியா சுதந்திரம் பெற்ற பின்பும் முப்பது ஆண்டுகள் கழித்து சுதந்திரம் பெற்ற இடம் ஒன்ற...
05/02/2026

கல்வராயன் மலை

தமிழகத்தில் ஒரு பகுதி இந்தியா சுதந்திரம் பெற்ற பின்பும் முப்பது ஆண்டுகள் கழித்து சுதந்திரம் பெற்ற இடம் ஒன்று உண்டு. அது கல்வராயன் மலை தான். நிலவியல் அடிப்படையில் கொங்கு நாட்டையும், நடு நாட்டையும் பிரிக்கும் முக்கிய கண்ணி. இதன் பொருட்டோ என்னவோ இங்கு மகேந்திரர் காலத்திய நடுகல்லும், சோழர் கால செக்கும், கோவிலும் உள்ளன.

கிருஷ்ண தேவராயரின் படைத்தளபதியாக இருந்த கல்வராயனின் வீரத்தை போற்றி கிருஷ்ண தேவராயர் அவருக்கு இந்த நிலப்பகுதியை தானமாக வழங்கியதாகவும், அதன் பொருட்டே இம்மலைக்கு கல்வராயன் மலை என பெயர் வந்ததாகவும் ஒரு கூற்று உண்டு.

விஜயநகர ஆட்சிக்காலத்தில் இம்மலை பாளையங்களாக பிரிக்கப்பட்டு இருந்ததாக தகவல் உண்டு. அதன்பின் ஆற்காடு நவாப் ஆட்சிக் காலத்தில் அரியக்கவுண்டன் ஜாகீர் என்பவருக்கு நவாப்பால் இம்மலை முழுவதும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. இவர் ஆர்க்காடு நவாபிடம் ராணுவத்தில் வேலை செய்தவர். இவரின் சிறப்பான சேவைக்காக அரியக்கவுண்டனுக்குக் கல்வராயன்மலை ஜாகீர் உரிமை நவாப்பால் வழங்கப்பட்டது. அதன்பின் படிப்படியாக மேலும் 4 ஜாகீர்கள் உறவின்முறை காரணமாகவும், ஊழியத்தின் காரணமாகவும் ஏற்படுத்தப்பட்டன.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஆங்கிலேயருக்குச் சாதகமாக நடக்க ஒப்புக் கொண்டதால் ஐந்து ஜாகீர்களுக்கும் இம்மலைப்பகுதி அவர்களின் தனிப்பட்ட சொத்துக்களாக ஆங்கிலேயர்களால் பட்டயங்கள் வழங்கப்பட்டன. இம்மலைவாழ் மக்கள் ஜாகீர்தார்களுக்குக் கொத்தடிமைகளாக இருந்து வந்தனர்.

1947இல் இந்தியா விடுதலை பெற்றாலும் இந்த மலைவாழ் மக்களுக்கு அந்த நாள் விடுதலை நாளாக அமையவில்லை. சுதந்திர நாட்டிலும் இம்மக்கள் தொடர்ந்து ஜாகீர்தாரின் கொத்தடிமைகளாகவே இருந்து வந்தனர்.

1963 ஆம் ஆண்டு அரசு ஜாகீர்தார் ஆட்சியை இம்மலைப்பகுதியில் ஒழிக்க முயற்சி செய்தது. ஆனால் இவர்கள் அரசுக்கு இணங்காமல் நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றனர். நீதி மன்றத்தில் தடை உத்தரவு பெற்ற ஜாகீர்தார்களுக்கு எதிராக அப்போதைய தென்னார்க்காடு மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. பத்மநாபன் அவர்களின் முயற்சியால் ஜாகீர்தார்கள் 14.08.1976 ஆம் ஆண்டு நீதி மன்றத்திலிருந்து எவ்வித நிபத்தனையுமின்றி வழக்கினைத் திரும்பப் பெற்றுக் கொண்டு அரசிடம் இம்மலைப் பகுதிகளைக் கொடுத்து விடுவதாக ஒப்புக் கொண்டார்கள்.

இதன்படி 25.8.1976ல் ஜாகீர்தாரர்களின் மலைப்பகுதிகளின் நிர்வாகத்தை இந்திய அரசு ஏற்றுக் கொண்டது. உண்மையில் இதுவே இவர்களின் சுதந்திர நாள். அதன் பின்பே அரசும் அரசு நிர்வாக அலுவலகங்களும் மேலே சென்றன. பின் வெள்ளிமலையைத் தலைமையாக ஒன்றியமும் ஒன்றிய அலுவகமும் 1985ல் அமைக்கப்பட்டது.

திருவண்ணாமலை வரலாற்று ஆய்வு நடுவம் நடத்தும் கல்வராயன் மலை மரபு நடையில் பங்கு பெற

https://forms.gle/EwZvwwgDjydbL6769

திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் 26 ஆவது மரபு நடை தேதி மாற்றம்வரும் பிப்ரவரி 2026, 21,22 சனி, ஞாயிறு ஆகிய த...
02/02/2026

திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் 26 ஆவது மரபு நடை தேதி மாற்றம்

வரும் பிப்ரவரி 2026, 21,22 சனி, ஞாயிறு ஆகிய தேதிகளில் நடத்த இருந்த நிலையில் அதிகமான திருமணம் நடக்கும் நாளாக இருப்பதால் பலரால் மரபு நடைக்கு கலந்து கொள்ள இயலவில்லை எனக் கோரியதால், மரபு நடையை ஒரு வாரம் தள்ளி நடத்த முடிவுசெய்துள்ளோம்.

நாள்: பிப் 28,மார்ச் 01, சனி, ஞாயிறு

கட்டணம் ரூ 4999/-
(Travel, Food, Luxury stay, Camp fire etc..)

தொடர்புக்கு: 9080480924, 7708673782
வருகையை உறுதி செய்ய ...

https://forms.gle/EwZvwwgDjydbL6769
சபா



Reader's Review for  #திரிசூல_பர்வதமலைஅன்புள்ள திரு பாலமுருகன் நீங்களும் திரு சி. பழனிசாமி அவர்களும் எழுதிய திரிசூல பர்வ...
10/09/2025

Reader's Review for #திரிசூல_பர்வதமலை

அன்புள்ள திரு பாலமுருகன்
நீங்களும் திரு சி. பழனிசாமி அவர்களும் எழுதிய திரிசூல பர்வத மலை புத்தகத்தை இன்று வாசித்து முடித்தேன். அருமையான ஆய்வுப் புத்தகம்.
பர்வதம், மலை இரண்டும் மலைக்கான பொதுப் பெயர்களா க இருக்க அந்த மலையின் சிறப்பு பெயர் என்ன என்ற கேள்வியுடன் தொடங்கி அதன் முழுப் பெயர் திரிசூலம பர்வதமலை என்று கல்வெட்டு இலக்கியச் சான்றுகளுடன் நிறுவியதுடன் அது நவிர மலை அல்ல நவிர மலை எங்கு உள்ளது என்பதையும் அவ்வாறே நிறுவியுள்ளது.
பாறை ஓவியங்கள், கல்பதுக்கை, கல்வெட்டுகள், இலக்கியச் சான்றுகள் என பெருங்கற்காலத்திலிருந்து தற்போது வரை அதன் வரலாற்றைத் தொகுத்து அளித்திருப்பது.
கிரிவலச் சித்தரிப்பு ஒரு மரபு நடையைப் போல நடு கற்கள், கோயில்கள், கல்வெட்டுகள், பழங்கால ஊர்ப் பெயர்கள் என்பதாக விவரித்துள்ளது.
கிரிவலத்தையும் மலையேற்றத்தையும் ஒரு பயணக் கட்டுரை போல சுவைபட சொல்லியிருப்பது
அருகே உள்ள ஊர்களையும் இரு வகை சப்த ஸ்தானங்களையும் செய்யாறு மிருகண்டா ஆறு ஆகியவற்றின் பின்புலத்தோடு அறிமுகப்படுத்தி இருப்பது.
அந்த மலையில் வாழும் உயிரினங்களையும் பறவைகளையும் அறிமுகப்படுத்தி இருப்பது. குறிப்பாக அழிந்து வரும் நிலையில் உள்ள ஒரு பறவையை (மஞ்சள் தொண்டை சின்னான்) குறிப்பிட்டு விவரித்துள்ளது .
திரிசூல மலை புராணத்தை அறிமுகப்படுத்தி சில பகுதிகளை தேர்ந்தெடுத்து கொடுத்திருப்பது .
வரைபடம், சிறப்பான அழகிய புகைப்படங்கள், முன் பின் அட்டைகளில் அழகிய ஒவியம்
என பல சிறப்புகள் கொண்டதாக விளங்குகிறது இந்த நூல்.
மேலதிகமாக என்னை வெகுவாகக் கவர்ந்தது ஒரு நாவல் போல விறுவிறுப்பாக சொல்லிச் செல்லும் நடைதான். வரலாறு, இலக்கியம், கல்வெட்டு என நிறைந்துள்ள தகவல்களைப் பத்திரிகைகளுக்கு உரிய நீட்டி முழக்கிய மொழி நடையையும் ஆய்வு நூல்களுக்கான கறாரான நடையையும் தவிர்த்து பொது வாசகர்களும் எளிதாக வாசிக்கும் வண்ணம் சுவைபடச் சொல்லி இருப்பது நூலின் சிறப்பு அம்சம்.
உங்களுக்கும் திரு சி. பழனிசாமி அவர்களுக்கும் என் வாழ்த்துகள்.
பா ராஜேந்திரன்

திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் வெளியிட்ட நூல்கள் தற்போது சலுகை விலையில் அளிக்கப்படுகிறது. குறுகிய காலத்திற்கே...
03/09/2025

திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் வெளியிட்ட நூல்கள் தற்போது சலுகை விலையில் அளிக்கப்படுகிறது.

குறுகிய காலத்திற்கே இச்சலுகை உண்டு..

ரூ.3465 மதிப்புள்ள 9 நூல்கள் ரூ.3000 /- மட்டும்.
(மொத்தமாக வாங்குவோருக்கு தபால் செலவு இலவசம்)
தங்கள் பிரதிகளைப் பெற இணைப்பில் உள்ள படிவத்தை பூர்த்தி செய்யவும்
தொடர்புக்கு : 8122157243 9080480924

https://forms.gle/aNNbdFhYt95QGcMM8

*அனைவருக்கும் வணக்கம் 30/08/2024 அன் நடந்து முடிந்த 9 நூல்கள் வெளியீட்டு வீழா..!*  இந்த நிகழ்வு வரலாற்று உலகில் நமக்கென ...
01/09/2025

*அனைவருக்கும் வணக்கம் 30/08/2024 அன் நடந்து முடிந்த 9 நூல்கள் வெளியீட்டு வீழா..!*

இந்த நிகழ்வு வரலாற்று உலகில் நமக்கென ஒரு புதிய வெளிச்சத்தை கொண்டு வந்துள்ளது இந்த 9 நூல்கள் வெளியீட்டு விழா.

9 நூல்கள் வெளியீடு என்பது ஒரு வரலாற்று நிகழ்வாகும் இந்நிகழ்வை நமது TCHR நடத்தி காட்டியுள்ளோம் என்பதில் நடுவத்தில் உள்ள அனைவரும் பெருமிதம் கொள்வோம்....!

இந்நிகழ்வினை பல பணி சுமைகளுக்கு நடுவில் இரவு பகலென பாராமல் உழைத்து சிறப்பாக முன்னெடுத்த நடுவத்தின் *? #செயலாளர் ச. #பாலமுருகன்* அவர்களுக்கு நடுவத்தின் சார்பாக வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

சொந்த பணிக்களுக்கு இடையில் அல்லது வேறு பணிகளில் கவனம் செலுத்தாமல் புத்தகப் தயாரிப்பு பணியில் ஈடுபட்ட #சிபழனிசாமி, சிற்றிங்கூர் ராஜா* அவர்களுக்கும். நடுவத்தின் சார்பாக பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துகொள்கிறேன்.
#தலைவர்முனைவர் எ. #சுதாகர்TCHR

முன்வெளியீட்டு திட்டம் திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் வரும் 23.08.2025 அன்று 9 நூல்களை வெளியிடுகிறது.இந்நூல்க...
14/08/2025

முன்வெளியீட்டு திட்டம்

திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் வரும் 23.08.2025 அன்று 9 நூல்களை வெளியிடுகிறது.
இந்நூல்கள் தற்போது முன்வெளியீட்டு திட்டத்தில் குறைந்த விலையில் அளிக்கப்படுகிறது. இந்த சலுகை 22.08.2025 வரை மட்டுமே...

மொத்த மதிப்பு ரூ.3465 உள்ள நூல்கள் ரூ.2500 /- மட்டும்.
(தபால் செலவு தனி)
தங்கள் பிரதிகளை பதிவு செய்ய இணைப்பில் உள்ள படிவத்தை பூர்த்தி செய்யவும்
தொடர்புக்கு : 8122157243 9080480924

https://forms.gle/aNNbdFhYt95QGcMM8

திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் - நடத்தும் புத்தக வெளியீட்டு விழாவரலாறு, தொல்லியல், கலை சார்ந்த 9 புத்தகங்கள் ...
03/08/2025

திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் -
நடத்தும்
புத்தக வெளியீட்டு விழா

வரலாறு, தொல்லியல், கலை சார்ந்த 9 புத்தகங்கள் வெளியிடப்படவுள்ளன.

இடம்: அண்ணா நூற்றாண்டு நூலகம், கோட்டூர்புரம், சென்னை
நாள்: 23-08.25, சனிக்கிழமை
நேரம்: மாலை 3.00 மணி

அனைவரும் வருக...

சபா

#திருவண்ணாமலைமாவட்டவரலாற்றுஆய்வுநடுவம்









#தண்டராம்பட்டு

திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் - நடத்தும் புத்தக வெளியீட்டு விழா...நூல் அறிமுகம் - 8 & 98. மீ கொன்றை நாடு(தண்...
27/07/2025

திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் -
நடத்தும்
புத்தக வெளியீட்டு விழா...
நூல் அறிமுகம் - 8 & 9

8. மீ கொன்றை நாடு
(தண்டராம்பட்டு வட்ட வரலாற்று தடயங்கள்)

வட்ட வரலாற்று வரிசையில் தனித்துவமான, அரிதான செய்திகள், நடுகற்கள், சிற்பக்குளங்கள், தாய் தெய்வம், சாத்தனூர் அணை வரலாறு ஆகியவற்றை நிலவியல் பின்புலத்தில் விவரிக்கிறது இந்நூல்.

9. சிற்பக் குளங்கள் (சின்னியம் பேட்டை, கீழ் நாவந்த வாடி சிற்பக் குளங்கள்)

தமிழ்நாட்டின் தனிச்சிறப்பு பெற்ற சிற்பக் குளங்கள் இவை. 300 க்கும் மேற்பட்ட புடைப்புச் சிற்பங்களை ஆவணப்படுத்தி அதன் சிறப்பை விளக்கும் நூல். ஆங்கிலத்தில் அழகிய வண்ணப் புகைப்படங்களோடு வருகிறது

வெளியீட்டு விழா விவரம் இன்று மாலை.

சபா

#திருவண்ணாமலைமாவட்டவரலாற்றுஆய்வுநடுவம்




Address

Tiruvannamalai
606601

Alerts

Be the first to know and let us send you an email when திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Museum

Send a message to திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம்:

Share

Category