10/08/2026
ஆடி திருவாதிரை: சிறந்த நிர்வாகம், ஆட்சித்திறன் ஆகியவற்றின் மூலம் பொற்கால ஆட்சி வழங்கிய கள்ளர் இனத்தில் தோன்றிய ராஜேந்திர சோழ தேவர் பிறந்தநாள்.
தமிழ்ப் பெருநிலத்தின் தன்னிகரில்லா பெருவேந்தன் ராஜேந்திர சோழ தேவர். கடல் கடந்து அயல்நாட்டைக் கைப்பற்றிய முதல் இந்திய மன்னன் இவனே. தன் ஆட்சிக்காலத்தில் வடக்கே கங்கை வரை சென்று வெற்றிக்கொடி நாட்டியதோடு, கடல்கடந்து இலங்கை, சுமத்ரா, கடாரம், ஸ்ரீ விஜயம், மலேயா ஆகிய கிழக்காசிய தேசங்களையும் வென்றவன். முதன்முதலில், கடற்படை அமைத்தவர்.
கங்கைகொண்ட சோழபுரத்தில் பெரிய கோயில் கட்டி, லிங்கத்தையும் நந்தியையும் பெரிதாக பிரதிஷ்டை செய்தார்.