26/07/2026
நங்கவள்ளி ஆட்டுச் சந்தைக்கு விரிவான இடவசதி செய்த நங்கவள்ளி பேரூராட்சி நிர்வாகத்திற்கு நன்றிகள்
ஆடுகள், வியபாரிகள் நிற்பதற்கு போதிய இடம் விட்டு, ஆட்டோ டெம்போ வாகனங்களை புளிய மரத்தடியில் உள்ளே தள்ளி நிறுத்த வேண்டும்.
சேலம் மாவட்டம் நங்கவள்ளியில் ஞாயிற்றுக் கிழமைதோறும் வாரச்சந்தைக் கூடுகிறது. இதில் ஆட்டுச் சந்தைக் கூடும் இடம் சிறியதாக இருந்ததால் அருகில் இருக்கும் இடத்தை சுத்தம் செய்து விரிவான இடமாக்க செய்திட வேண்டும் என்று கடந்த சிலமாதங்களுக்கு முன்பு நங்கவள்ளி பேரூராட்சிக்கு பொதுமக்களின் கோரிக்கையாக முகநூலில் பதிவிட்டுயிருந்தோம்.
இந்நிலையில்… மேற்கண்ட ஆட்டுச் சந்தையை ஒட்டி இருந்த இடத்தை jcb இயந்திரம் மூலம் புல் செடிகளை அகற்றி விரிவான இடமாக செய்து கொடுத்த நங்கவள்ளி பேரூராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் சார்பாக நன்றி நன்றிகள்.
தற்போது விசாலமான இடம் இருந்தும் ஆடுகள், விவசாயிகள், வியபாரிகள் நெருக்கமாக நிற்கவேண்டிய நிலையே தொடர்கிறது. அதனால் ஆடுகளை ஏற்றி வரும் ஆட்டோ, டெம்போ வாகனங்களைப் புளிய மரத்தடியில்( அதாவது மதிற் சுவர் அருகில்) உள்ளே தள்ளி நிறுத்த அறிவுறுத்த வேண்டும்.
மற்ற நாட்களில் உள்ளே யாரும் செல்லாதவாறு கயிறு கட்டித் தடுப்பு வேலி அமைத்து சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.